புலிகளை அழிக்க இந்தியா ஆதரவு! - பாசில் ராஜபக்ஷே

இலங்கைத் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் குதிக்கத் தயாராகி வரும் தமிழ் மக்களுக்கு பாசில் ராஜபக்ஷேவின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இலங்கையின் பிரபல நாளிதழுக்கு பாசில் ராஜபக்ஷே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
ஈழத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த இந்தியாவின் கவலையை இலங்கை அரசு பரிசீலிக்கும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உறுதி அளித்துள்ளார். அவரை சமீபத்தில் சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத்திடம் உறுதி அளிக்கப்பட்டது.
புலிகளை அழிக்கும் எங்களின் நடவடிக்கையில் சில நட்பு நாடுகளின் ஆதரவு கிடைத்துள்ளது. அதிலும் அண்டை நாடான இந்தியாவின் ஆதரவு பெரும் சக்தியாக உள்ளது. இந்த விஷயத்தில் இந்தியா அதிகபட்ச ஆதரவை எங்களுக்கு அளித்து வருகிறது.
புலிகள் மீதான ராணுவ நடவடிக்கைகளின்போது அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழர்களுக்கு உணவு, மருந்து, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பிடங்களை விட்டு வெளியேறி வரும் தமிழர்கள் அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.
ஈழத் தமிழர் பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தும்படி இலங்கையை வலியுறுத்தும்படியும் இலங்கைக்கு இந்தியா உதவக் கூடாது என்றும் முதல்வர் கருணாநிதி பிரதமரை கேட்டுக் கொண்டார். திரையுலகினர், வர்த்தகப் பிரமுகர்கள் என பல தரப்பு மக்களும் தங்கல் உணர்வுகளை போராட்ட வடிவில் காட்ட முடிவெடுத்துள்ளனர்.
இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மன்மோகனும் உறுதியளித்தார். இந்நிலையில் இந்தியா தங்களுக்கு அதிகபட்ச ஆதரவை நல்கி வருகிறது என்று பாசில் ராஜபக்ஷே கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இலங்கை அதிபர் மஹிந்தா ராஜபக்சேவை தாம் சந்தித்ததை உறுதி செய்துள்ள இலங்கைக்கான இந்திய தூதர் அலோக் பிரசாத், அப்போது விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து விரிவாக தெரிவிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications