அழகிரியை மதுரையிலிருந்து வெளியேற்றுவோம்! - ஓ.பி.
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை நகரிலிருந்து உடனடியாக அழகிரி வெளியேற வேண்டும் என்று அதிமுக தலைவர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
முன்னாள் முதல்வரும், அதிமுகவின் முக்கியத் தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் மதுரை கிழக்கு மண்டலகத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான அதிமுகவினர் பங்கேற்றனர்.
அழகிரியின் தலையீட்டால் மதுரை மாநகராட்சிப் பணிகள் முடங்கி விட்டதாகவும், மதுரை நகரம் நல்லவிதமாக இருக்க வேண்டுமென்றால் அழகிரி உடனடியாக மதுரையிலிருந்து வெளியேற வேண்டும் என்றும் அதிமுக கோரிக்கை விடுத்தது.
மாநகராட்சி ஒப்பந்தங்கள் அழகிரி கைகாட்டும் நபர்களுக்கே வழங்கப்படுவதாகவும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளமும் கூட முழுமையாக வழங்கப்படுவதில்லை, அதன் ஒரு பகுதியை துணைமேயர் எடுத்துக் கொள்வதாகவும் பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.












Click it and Unblock the Notifications