மாணவர்கள் போராட்டம்-ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு
சென்னை: ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்தக் கோரியும், அந்நாட்டு ராணுவத்துக்கு வழங்கப்படும் உதவிகளை நிறுத்த வலியுறுத்தியும் சென்னையில் கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியையும் எரித்தனர்.
இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்தப் போவதாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அறிவித்திருந்தது.
இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
முக்கியமாக சென்னை பல்கலைக்கழகம், மாநில கல்லூரி, நந்தனம் கலைக் கல்லூரிகளில் கமிஷனர் சேகர் உத்தரவின் பேரில் இணை போலீஸ் கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், குணசீலன் மேற்பார்வையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தலைவர் திருமலை தலைமையில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இலங்கை அரசை கண்டித்து இன்று போராட்டத்தில் குதித்தனர்.
போலீசாருடன் மோதல்:
போராட்டத்தில் இலங்கை ராணுவத்தை கண்டித்தும், அதிபர் ராஜபக்சேயை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். கையில் கண்டன வாசகங்களை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.
கடற்கரை சாலையில் மறியல் செய்ய முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கொடும்பாவி எரிப்பு:
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் ஒரு பிரிவினர் போலீசாரின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பல்கலை வளாகத்திற்குள் அங்கும், இங்கும் சுற்றியபடி கண்டன கோஷமிட்டனர்.
அப்போது திடீரென்று பல்கலைக்கழகத்திற்குள் இருந்து இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்தனர். இதைபார்த்த போலீசார் ஓடிவந்து தண்ணீர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
போராட்டத்தின்போது, இந்திய அரசே இலங்கையில் தமிழின படுகொலையை தடுத்து நிறுத்த வேண்டும், இலங்கைக்கு வழங்கும் ராணுவ உதவியை உடனே நிறுத்த வேண்டும்,
ஈழ தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண இலங்கை அரசை நிர்ப்பந்தம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைத்தனர்.
சுமார் 2 மணி நேரம் ஆவேசமாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பின்னர் அமைதியாக கலைந்து சென்றனர்.
தேர்வுகள் தள்ளி வைப்பு:
அதே போல மாநில கல்லூரி, நந்தனம் கலை கல்லூரி உள்பட சென்னையில் உள்ள பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்தனர். இதனால் இன்று நடக்க இருந்த தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
கல்லூரி வளாகத்தில் இலங்கை ராணுவத்தையும், அதிபர் ராஜபக்சேவையும் கடுமையாக கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
சென்னை கிண்டி மேம்பாலத்தில் ஜொலித்த 1.5 கிலோ தங்கம்.. ஜிஎஸ்டி ஆபீசர் பின்னாடி போனால்? பெரிய ட்விஸ்ட் -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக்












Click it and Unblock the Notifications