மெர்ரில் லின்ஜ்: நஷ்டம் 5.56 பில்லியன் டாலர்
பெங்களூரு: மெர்ரில் லின்ஜ் நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நஷ்டம் 5.56 பில்லியன் டாலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்தின் மூன்றாவது காலாண்டு நிதிநிலை அறிக்கை நேற்று வெளியானது.
இந்த நிறுவனம் தனது தொடர் நடவடிக்கைகளால் ரூ.5.56 பில்லியன் டாலர்கள் வரை இப்போது நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
இதன் மூலம் மெர்ரில் லின்ஜின் ஒரு பங்குக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் ரூ. 250. இந்த காலகட்டத்தில் இதன் நிகர வருவாய் 2.8 பில்லியன் டாலர்கள்.
தற்போது இந்த நிறுவனத்தில் 60,900 ஊழியர்கள் உள்ளனர். அமெரிக்காவில் இது ஒரு முதலீட்டு வங்கியாக செயல்பட்டாலும், இந்தியாவில் மூலதன நடவடிக்கைகளில் குறைவாகவே ஈடுபட்டது. பெரும்பாலும் பங்கு வர்த்தகம், அடமானக் கடன் வழங்குதல்தான் இதன் இலக்காக இருந்தது.
இந்த நிறுவனத்தின் பங்குகளை பேங்க் ஆப் அமெரிக்கா சமீபத்தில் வாங்கியது நினைவிருக்கலாம். இந்தியாவில் பங்கு வர்த்தகத் துறையில் மெர்ரில் லின்ஜ் நிறுவனம் முன்னிலை வகித்து வருகிறது.












Click it and Unblock the Notifications