போர் தமிழர்கள் மீதல்ல, புலிகள் மீதே-இலங்கை

Subscribe to Oneindia Tamil

Sri Lanka map
கொழும்பு: இலங்கையில் தற்போது நடந்து வரும் போர் தமிழர்கள் மீதானது அல்ல, விடுதலை புலிகள் மீதுதான் என்றும் அவர்கள் மீதான தாக்குதல் தொடரும் என்றும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு செயலாளர் டாக்டர் பலிதா கோஹனா கூறியதாவது:

எங்களின் போர் தீவிரவாதத்தை எதிர்த்துதான். தமிழர்களுக்கு எதிராக அல்ல. வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் நாங்கள் ராணுவ தாக்குதல் தொடங்கும்போதெல்லாம் இதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம்.

கடந்த 2006-07ம் ஆண்டில் கிழக்குப் பகுதிகளில் தீவிரவாதத்தை எதிர்த்து ராணுவம் நடத்திய தாக்குதல்கள் மக்களுக்கு சேதம் விளைவிக்காமல் நடத்தப்பட்டன.

2 லட்சம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர். ஆனால் உயிரிழப்புகள் இதில் ஏற்படவில்லை. புலிகள் தரப்பில் வெளியாகும் விபரங்களும் அதையே தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பற்ற உள்ளதாக கூறப்படுகிறது. வன்னிப்பகுதியில் மட்டும் உள்ள 2லட்சம் தமிழர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இலங்கையின் பிற பகுதியில் உள்ள தமிழர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்.

இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தகவல்கள் பரிமாறப்பட்டு வருகிறது என்றார்.

இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹிதா பொகல்லகாமா அரசு பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். நாடு திரும்பும் முன் இந்தியா சென்று வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியையும், பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனையும் சந்திக்க உள்ளார். அவர்களிடம் இலங்கையின் நிலைப்பாடு குறித்து விரிவாக எடுத்துரைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+