For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விபத்து: சிகிச்சை பெற்ற பெண் நீதிபதி சாவு

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி: விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் நீதிபதி இறந்தார்.

சென்னை 6வது டிவிஷன் சிவில் கோர்ட் நீதிபதி மீனாட்சி (42). இவரது கணவர் பழனியப்பன் (50). சைதாப்பேட்டை நீதிபதிகள் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இருவரும் கடந்த வாரம் திருச்சியில் உள்ள உறவினர் வீட்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு விட்டு கார் மூலம் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது, திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே பாடாலூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் மீது எதிரே வந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியது.

இதில் படுகாயமடைந்த நீதிபதி மீனாட்சியையும், அவரது கணவரையும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பழனியப்பன் உயிரிழந்தார். நீதிபதி மீனாட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரும் இறந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X