ஹிண்ட்ராப்பின் நூதன டி-சர்ட் போராட்டம்
Subscribe to Oneindia Tamil

மலேசியாவில் உள்ள இந்துக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கமான ஹிண்ட்ராப் அமைப்பு (Hindraf), தமிழர் உள்பட இந்தியர்களுக்காக சம உரிமை கோரி போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில் ஹின்ட்ராப் அமைப்புக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது ஒரு சட்ட விரோத அமைப்பு என்றும் அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் செய்ல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளன.
அரசின் இந்த தடையை எதிர்த்து அமைதி போராட்டம் அறிவித்துள்ளது ஹின்ட்ராப். சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் ஆரஞ்ச் நிற டி-சர்ட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவிக்கும்படி அவ்வமைப்பின் தலைவர் வைத மூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications