சென்செக்ஸ்- மீண்டும் 10,000!!
மும்பை: நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் எடுத்து வரும் தொடர் நடவடிக்கை காரணமாக மீண்டும் நிமிரத் தொடங்கியுள்ளது இந்திய பங்குச் சந்தை.
இன்று வர்த்தகம் துவங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் இருந்த சென்செக்ஸில் ஒரு கட்டத்தில் 450 புள்ளிகள் உயர்ந்த்து. நிப்டியும் இன்று ஏற்றம் கண்டது.
இன்போஸிஸ், சத்யம், டிசிஎஸ் போன்ற ஐடி நிறுவனப் பங்குகள் இன்று நல்ல விலைக்குப் போயின கிட்டத்தட்ட 5 சதவிகிதம் வரை இந்தப் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டன. வங்கித் துறை பங்குகளுக்கும் இன்று நல்ல நாள்தான்.
ஆனால் ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் பெட்ரோலியப் பங்குகளின் விலை சரிவுக்குள்ளாகின.
வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 247 புள்ளிகள் குறைந்து 10,247 புள்ளிகளிலும், நிப்டி 48 புள்ளிகள் உயர்ந்து 3122 ஆகவும் இருந்தது.
ஹாங்காங் மற்றும் ஜப்பானின் பங்குச் சந்தைகளிலும் இன்று ஓரளவு முன்னேற்றம் காணப்பட்டது.












Click it and Unblock the Notifications