வங்கிகளில் முதலீடுகள் பத்திரமாக உள்ளன-பிரதமர்

பொருளாதார நிலை குறித்து மக்களவையில் இன்று அவராகவே ஒரு அறிக்கையை வாசித்தார். அவர் கூறியதாவது:
சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல்கள், நெருக்கடிகளின் விளைவுகளை இந்தியாவும் சந்தித்து வருவது உண்மை தான். ஆனால், இந்தியாவின் பொருளாதார அடிப்படைகள் பலமானவை. அவை ஸ்திராமாகவே உள்ளன.
ஆனாலும் சர்வதேச அளவி்ல் நிலவும் நிச்சயமற்ற தன்மையால் இந்திய பொருளாதாரமும் தாற்காலிமாக மந்த நிலையை சந்திக்கலாம்.
2007-08ம் ஆண்டுகளின் நாட்டின் வளர்ச்சி விகிதம் 9.2 சதவீதமாக இருந்தது. இது 7.5 சதவீதமாக குறையலாம். இதற்கு மேல் குறைய வாய்ப்பில்லை என்பது தான் பெரும்பாலான நிபுணர்களின் கருத்தாக உள்ளது. ஆனாலும் இந்திய பொருளாதாரத்துக்கு ஏற்படும் சவால்களை, பிரச்சனைகளை சமாளிக்க மத்திய அரசு எல்லா வகையான நடவடிக்கைகளையும் எடுக்கும்.
அமெரிக்க நிதிச் சிக்கலால் இந்திய வங்கிகளுக்கு எந்த நேரடி பாதிப்பும் இல்லை. அமெரிக்காவில் கரைந்துபோன நிதியில் இந்திய வங்கிகளின் நிதி பெரிய அளவில் இல்லை.
இதனால் இந்திய பொதுத்துறை, தனியார் வங்கிகளின் நிதி நிலைமையில் எந்த பிரச்சநையும் இல்லை. அவை அனைத்துமே போதுமான நிதியுடன் போதுமான கட்டுப்பாடுகளுடன் இயங்கி வருகின்றன.
இதனால் இந்தியாவில் எந்த வங்கியும் திவாலாக வாய்ப்பே இல்லை. வங்கிகளில் உள்ள மக்களின் பணம் பத்திரமாக உள்ளது என்பதை நான் உறுதி செய்கிறேன்.
அதே நேரத்தில் சந்தையில் பணப் புழக்கம் குறைந்து போயுள்ளது உண்மை தான். இந்திய நிதி அமைப்புகளுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் கடன் குறைந்துவிட்டது. இதனால் தான் பணப் புழக்கம் குறைந்துள்ளது. மேலும் இதே காரணத்தால் தான் வங்கிகள் கடன் கொடுப்பதை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையை சரி செய்யத் தான் ரிசர்வ் வங்கி அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வங்கிகளில் பண இருப்பை அதிகரிக்கச் செய்து வருகிறது. இதற்காகத் தான் வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதம் (crr), வங்கிகளுக்கான கடன் வட்டித் தொகை (repo rate) ஆகியவற்றை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.
மேலும் வங்கிகள் தங்களுக்குள் வாங்கிக் கொள்ளும் அவசர நிதிக்கான (call money rate) வட்டியும் குறைக்கப்பட்டுள்ளது என்றார் பிரதமர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications