உயர் கல்விக்கு போதிய ஆசிரியர்கள் இல்லை: எம்பி
தென்காசி: கல்விக்காக மத்திய அரசு 6 சதவீதம்தான் செலவு செய்கிறது. இதனால் உயர் கல்வி, தொழில்கல்விக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்பி அப்பாதுரை கூறினார்
அம்பாசமுத்திரம் கலைக் கல்லூரியில் எம்பி தொகுதி வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
கல்லூரி ஆட்சி மன்ற குழு தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். அடிக்கல்லை நாட்டி எம்பி அப்பாத்துரை பேசியதாவது:
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் இதுவரை 49 பள்ளி, கல்லூரிகளுக்கு வகுப்பறை கட்டிடம் கட்ட ரூ.3 கோடியே 63 லட்சம் நிதி வழங்கியுள்ளேன். இந்தியாவில் 20,000ம் பள்ளிகளில் ஆசிரியரே கிடையாது. 19,000 பள்ளிகளில் மாணவர்களே கிடையாது.
வடமாநில எம்பிக்கள் 20 சதவிதம் கமிஷன் பெற்றுக் கொண்டு நிதியை கொடுத்து வருகின்றனர். இதை கண்காணிக்க தற்போது குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கல்விக்காக மத்திய அரசு 6 விழுக்காடுதான் செலவு செய்கிறது. இதனால் உயர் கல்வி, தொழில்கல்விக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பீடி தொழிலாளர்களுக்காக கல்வி உதவித் தொகை மற்றும் பிற உதவி தொகையாக ரூ.14.25 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications