சட்டவிரோத குடியேற்றம்-பெல்ஜியத்தில் 200 இந்தியர்கள் கைது
பிரசல்ஸ்: பெல்ஜியம் வழியாக இங்கிலாந்தில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக சென்ற 200 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் புரோக்கர்கள் சிலர், ஆசியா நாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு திருட்டத்தனமாக இங்கிலாந்து செல்ல உதவுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவரமாக கண்காணித்து, சோதனைகள் செய்தனர்.
போலீஸார் நடத்திய ரெய்டினபோது 15 புரோக்கர்கள் பிடிபட்டனர். இவர்கள் தலா ரூ.10 லட்சம் வாங்கிக் கொண்டு அவர்களை இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேற அழைத்து சென்று விட்டுவிட்டு வருவதாக போலீஸார் கூறினர்.
அவர்களிடம் பணம் கொடுத்துவிட்டு இங்கிலாந்துக்கு செல்வதற்கு காத்திருந்த 200 இந்தியர்களையும் போலீசார் கைது செய்தனர். கைதான 200 இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களில் சிலர் பெண்கள், குழந்தைகள் உள்பட 15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் அதில் இருந்தனர்.
இதில் ஜன்னல் இல்லாத 120 சதுர அடி அறைக்குள் 24 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களை மீட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications