For Daily Alerts
Just In
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
நெல்லை: கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுடலையாண்டி தலைமையில் போலீசார் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை தாலுகா பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் அச்சன்கோவில் செல்லும் பேருந்தில் 6 மூடை ரேசன் அரிசியை ஏற்றிய விசுவநாதபுரம் இசக்கி தேவர் என்பவரை கைது செய்து 6 மூடை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
மேலும் தேன்பொத்தை அருகே வாகன சோதனை நடத்தியபோது டிவிஎஸ் ஸ்கூட்டியில் 4 மூடை ரேசன் அரிசியை கடத்தி வந்த சுந்தரராஜன் என்பவரையும் கைது செய்தனர்.
அரிசி, மொபைட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து நெல்லை உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு கொண்டு வந்தனர்.
Story first published: Tuesday, October 21, 2008, 11:22 [IST]