For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

நெல்லை: கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சுடலையாண்டி தலைமையில் போலீசார் தமிழக-கேரள எல்லையான செங்கோட்டை தாலுகா பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது செங்கோட்டையிலிருந்து கேரள மாநிலம் அச்சன்கோவில் செல்லும் பேருந்தில் 6 மூடை ரேசன் அரிசியை ஏற்றிய விசுவநாதபுரம் இசக்கி தேவர் என்பவரை கைது செய்து 6 மூடை ரேசன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் தேன்பொத்தை அருகே வாகன சோதனை நடத்தியபோது டிவிஎஸ் ஸ்கூட்டியில் 4 மூடை ரேசன் அரிசியை கடத்தி வந்த சுந்தரராஜன் என்பவரையும் கைது செய்தனர்.

அரிசி, மொபைட் ஆகியவற்றையும் பறிமுதல் செய்து நெல்லை உணவு கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு கொண்டு வந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X