உத்தப்புரம் விவகாரம்-மதுரையில் உண்ணாவிரதம் !
மதுரை: உத்தப்புரம் மக்களின் உரிமைகளை நிலைநிறுத்தக் கோரி மதுரையில் நவம்பர் 5 -ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.
காவல்துறையின் தாக்குதலுக்கு உள்ளான உத்தப்புரம் தலித் மக்களை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
உத்தப்புரத்தில் தீண்டாமைச் சுவரை அகற்றிய பின்னரும் தலித் மக்கள் அச்சமின்றி அப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
எனவே, இப் பாதையை அவர்கள் அச்சமின்றி பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை துரித வேகத்தில் எடுக்க வேண்டும்.
அண்மையில் காவல்துறை நடத்திய தாக்குதலில் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.
பொய் வழக்கு போட்டு மூலம் சிறையில் உள்ள தலித் மக்கள் அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும். இந்த தாக்குதலில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும்.
மேலும் உத்தப்புரம் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லும் கழிவு நீர் சாக்கடைக்கு மூடி போடவும், பேருந்து நிழற் குடை அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 5ம் தேதி மேலமாசி வீதி- வடக்குமாசி வீதி சந்திப்பில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென் மாவட்டக் குழுக்களின் சார்பில் இளைஞர்கள் பங்கேற்கும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications