For Daily Alerts
Just In
தமிழர் படுகொலை-இலங்கை அதிகள் உண்ணாவிரதம்
குளித்தலை: இலங்கை தமிழர் படுகொலையை கண்டித்து குளித்தலை அருகே இரும்பூதிப்பட்டியில் உள்ள முகாமைச் சேர்ந்த இலங்கை அகதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ளது இரும்பூதிப்பட்டி. இங்கு, இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இலங்கை ராணுவம் அப்பாவி தமிழர்களை படு கொலை செய்தவதாக கூறி இங்குள்ள இலங்கை அகதிகள் முகாம் தலைவர் ஆறுமுகம் தலைமையில் உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
இந்த உண்ணாவிரத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Comments
Story first published: Tuesday, October 21, 2008, 14:43 [IST]