கோவிலுக்குப் போன ஆசிரியை மாயம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: கோவிலுக்குப் போவதாக கூறி விட்டுச் ெசன்ற ஆசிரியை மாயமானார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் இந்திரா நகரை சேர்ந்தவர் தாமஸ் மகள் புஷ்பம். தனியார் பள்ளி ஆசிரியை. கோயிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. வீட்டில் இருந்த 20 பவுன் நகையையும், காணவில்லை.
இதுகுறித்து தாமஸ் தூத்துக்குடி தென்பாகம் போலீசில் புகார் செய்தார். புஷ்பம் கடத்தப்பட்டரா, அல்லது யாருடனும் சென்றாரா என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications