'மொன்ன பாம்பு' பிடிக்க அலை மோதும் மக்கள்!
தாராபுரம்: 'மொன்ன' பாம்பு எனப்படும் ஒரு வகை விஷமற்ற பாம்பைப் பிடித்தால், ரூ. 50,000 ஆயிரம் கிடைக்கும் என செய்தி பரவியதால் தாராபுரம் பகுதி மக்கள் மொன்ன பாம்பைப் பிடிக்க சாரை சாரையாக படையெடுத்துள்ளனர்.
மொன்ன பாம்பு ஏனைய பாம்புகளைப் போல விஷத் தன்மை கொண்டது கிடையாது. அதே போன்று வேகமாக செல்லும் திறன் கிடையாது. இதை யார் வேண்டும் என்றாலும் பிடிக்கலாம். இதனால் ஆபத்து இல்லை.
இந்த நிலையில் இந்த மொன்ன பாம்புகளை பிடித்துக் கொடுத்தால் ரூ.50,000 ஆயிரம் வரை கிடைப்பதாக தகவல் பரவியது.
இதனால் தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராம மக்கள் தொடர் மழையைக் கூட பாராமல் மொன்ன பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்படி பிடிக்கும் பாம்புகளை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ கொடுக்கலாம் என்று கூறப்படுகிறது. இவ்வாறு பிடிக்கப்படும் மொன்ன பாம்புகளை கிலோ ரூ 50,000 புரோக்கர்கள் பெற்றுக் கொள்வதாக கூறப்படுகிறது.
இந்த மொன்ன பாம்புகள் மருந்து தயாரிக்க பயன்படுகிறது என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications