தமிழக அரசு விலக வேண்டும்: மதுரை ஆதினம்
திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார்.
திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும்.
28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளது.
நாடு முழுவதும் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. வெளியில் செல்லும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை அரசு கட்டுப்படுத்த முடியவில்லை.
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைதி ஏற்படவில்லை. மூத்த அரசியல்வாதிகள், நல்ல சிந்தனையாளர்கள், முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கே பட்டா தர வேண்டும் என்பதை ஒரு போதும் மதுரை ஆதினம் ஏற்றுக் கொள்ளாது.
ஆதினங்கள் கீழ் உள்ள பெரும்பாலான கோயில்கள் பணம் இன்றி திருப்பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளது. மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4 கோயில்கள் ரூ 4 கோடி ரூபாய் இல்லாததால் திருப்பணிகள் நடத்த முடியால் உள்ளது.
தமிழக அரசு மத நல்லிணக்கத்திற்காக தனியாக ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். அத்துறைக்கு திருமுறை, திருவாசகம், குரான், பைபிள் தெரிந்தவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications