தமிழக அரசு விலக வேண்டும்: மதுரை ஆதினம்
திருவாரூர்: இலங்கை தமிழர் பிரச்சனையில் தமிழக அரசு பதவி விலக முன் வர வேண்டும் என்று மதுரை ஆதினம் கூறியுள்ளார்.
திருவாரூர் வந்த மதுரை ஆதினம் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை தமிழர் பிரச்சனையில் மத்திய அரசுக்கு தமிழக அரசு கொடுத்துள்ள நெருக்கடி சரியான முடிவாகும்.
28ம் தேதி மத்திய அரசு சரியான முடிவு எடுக்காவிட்டால் தமிழக அரசு பதவி விலக வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜாதி, மதம், அரசியல் பாராமல் அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து போராட முன் வரவேண்டும்.
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தேவைப்படும் உணவு, உடை, மருந்துகள் அனுப்ப மத்திய அரசு விதிகளை தளர்த்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
யாழ்பாணத்தில், திரிகோணமலையில், திருச்சேரத்தில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலங்கள் உள்ளது.
நாடு முழுவதும் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது. வெளியில் செல்லும் பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. இதை அரசு கட்டுப்படுத்த முடியவில்லை.
சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைதி ஏற்படவில்லை. மூத்த அரசியல்வாதிகள், நல்ல சிந்தனையாளர்கள், முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது.
கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கே பட்டா தர வேண்டும் என்பதை ஒரு போதும் மதுரை ஆதினம் ஏற்றுக் கொள்ளாது.
ஆதினங்கள் கீழ் உள்ள பெரும்பாலான கோயில்கள் பணம் இன்றி திருப்பணிகள் செய்ய முடியாத நிலையில் உள்ளது. மதுரை ஆதினத்திற்கு சொந்தமான 4 கோயில்கள் ரூ 4 கோடி ரூபாய் இல்லாததால் திருப்பணிகள் நடத்த முடியால் உள்ளது.
தமிழக அரசு மத நல்லிணக்கத்திற்காக தனியாக ஒரு அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். அத்துறைக்கு திருமுறை, திருவாசகம், குரான், பைபிள் தெரிந்தவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications