For Daily Alerts
Just In
மரணமடைந்த போலீஸாருக்கு வீர வணக்க அஞ்சலி
நெல்லை: பணியின்போது வீரமரணம் அடைந்த காவல்துறையினருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நெல்லையில் நடந்தது.
பணியின்போது வீர மரணம் அடையும் போலீஸாருக்கு ஆண்டுதோறும் வீர வணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நெல்லை, பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகேயுள்ள காவலர் நினைவு ஸ்தூபியில் நேற்று காலை மாவட்ட வருவாய் அலுவலர் சீனிவாசன் தலைமையில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் டிஐஜி கண்ணப்பன், கமிஷனர் மஞ்சுநாதா, எஸ்பி ஆஸ்ரா கர்க், ஏடிஎஸ்பி மாணிக்கராவ், கூடுதல துணை கமிஷனர் உமா, மாநகராட்சி கமிஷனர் மோகன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின்போது 21 குண்டுகள் முழங்கி வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு அனைவரும் வணக்கம் செலுத்தினர்.
Comments
Story first published: Wednesday, October 22, 2008, 10:17 [IST]