தர்மபுரி-எய்ட்ஸ் விரக்தியில் குடும்பம் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி: எய்ட்ஸ் தாக்கியதால் விரக்தியடைந்து பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.

தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள பொன்னேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் (35). இங்குள்ள கயிறு திரிக்கும் ஆலையில் பணியாற்றினார்.

இவரது மனைவி வசந்தா (35). இவர்களுக்குமாதேஷ் (14) என்ற மகனும், பிரியா (13) என்ற மகளும் இருந்தனர்.

நான்கு பேருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மருத்துவ சோதனையில் சுரேஷூக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது.

அவருக்கு மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் எய்ட்ஸ் நோய் தாக்கத்துக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.

இந் நிலையில் பாயாசத்தில் விஷம் கலந்து குடித்து கணவன், மனைவி, குழந்தைகள் தற்கொலை செய்து கொண்டனர்.

நீண்ட நேரமாகியும் அவர்களது வீடு திறக்காமல் இருந்ததை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த கதவை உடைத்து சென்றனர்.

இறந்து கிடந்த 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+