வைகோ: சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது - கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு சட்டம் தனது கடமையைச் செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக கூறி வைகோ மற்றும் கண்ணப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து முதல்வர் கருணாநிதியிடம், இந்தக் கைது பெயரளவுக்கா அல்லது அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்றார்.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதிக்கப்பட்டுள்ள தடை நீக்கம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு இதுகுறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் எனவும் முதல்வர் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications