சென்னையில் ராஜீவ்காந்தி சிலை உடைப்பு
சென்னை: சென்னை கொடுங்கையூரில் ராஜிவ் காந்தியின் சிலை உடைக்கப்பட்டது. இதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு்ள்ளனர்.
சின்னாண்டிமடம்-சிட்கோ சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலையின் தலை உடைக்கப்பட்டு கீழ் பகுதியும் சேதப்படுத்தப்பட்டது.
இதையறிந்து திரண்டு வந்த காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கொடுங்கையூர்- தண்டையார்பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து போலீஸ் உதவி கமிஷ்னர் கன்னையா தலைமையில் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சிலையை சேதப்படுத்தியவர்களை மாலைக்குள் கண்டு பிடித்து கைது செய்வதாக உறுதியளித்தனர். இதையடுத்து சாலை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இருவர் கைது:
இந் நிலையில் சிலை உடைப்பு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 2 பேரை கொடுங்கையூர் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications