அதிமுகவுடன் ஜனவரிக்குள் கூட்டணி-திருநாவுக்கரசர்
காளையார்கோவில்: கூட்டணி குறித்து அதிமுகவுடன் பாஜக தலைவர்கள் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர் என அக் கட்சியின் எம்பியும் தேசியச் செயலாளருமான திருநாவுக்கரசர் கூறினார்.
காளையார்கோவில் மருதுபாண்டியர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பாஜக வெல்லும். விலைவாசி உயர்வு, மின்வெட்டு போன்றவற்றால் மத்திய, மாநில அரசுகள் மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
தமிழகத்தில் கூட்டணி குறித்து காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் தவிர மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும். பாஜக-அதிமுக கூட்டணி அமைய அதிக வாய்ப்புள்ளது. இதுகுறித்து ஜெயலலிதாவுடன் பாஜக தலைவர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். ஜனவரிக்குள் கூட்டணி முடிவு செய்யப்பட்டுவிடும்.
இலங்கை தமிழர்கள் உணவு, உடை, மருந்து கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அந்நாட்டிற்கு மத்திய அரசு ராணுவ உதவி செய்யக்கூடாது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலம் உணவு, மருந்து வழங்க வேண்டும். ஐ.நா., சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் நேரில் சென்று நிலையை ஆராய இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும்.
இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து தமிழக கட்சிகள் லாப, நஷ்ட கணக்கு போடக்கூடாது என்றார்.












Click it and Unblock the Notifications