புலிகள் ஆதரவு குரல்-பிரியங்கா மீது பாஜக புகார்
நாகர்கோவில்: ராஜிவ் கொலையாளி நளினியை பிரியங்கா சிறையில் சந்தித்த பின்னர்தான் தமிழ்நாட்டில் புலிகள் ஆதரவு குரல் அதிகரித்துவிட்டது என பாஜக மாநிலத் தலைவர் இல. கணேசன் கூறினார்.
நாகர்கோவிலில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சு, போராட்டம் அதிகரிக்க தமிழக அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல சோனியாவும், பிரியங்காவுமே காரணம். ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட பின் புலிகளை தமிழக மக்கள் ஆதரிக்கவில்லை. மாறாக விடுதலைப் புலிகளின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினியை பிரியங்கா சந்தித்து பேசிய பின்னர்தான் விடுதலை புலிகளுக்கான ஆதரவு குரல் அதிகரித்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. வைகோவை பொறுத்தவரை இலங்கை தமிழர் பிரச்னையில் தன் குரல் முதலில் ஒலிக்க வேண்டும் என்று நினைக்கிறார். கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே பேசி கைதாகியுள்ளார்.
தற்போதுள்ள அரசியல் கூட்டணிகள் லோக்சபா தேர்தலின் போது இருக்குமா என்று இப்போது கூற முடியாது. அதனால் 5 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பாஜக முடிவு செய்யும் என்றார்.












Click it and Unblock the Notifications