ராணுவ முகாம் அழிப்பு-கருணா குழுவினர் 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மட்டக்களப்பு: மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாமை சுற்றி வளைத்து தாக்கிய விடுதலைப் புலிகள் அந்த முகாமை அழித்தனர். இந்த மோதலில் அங்கிருந்த கருணா தலைமையிலான அமைப்பைச் சேர்ந்த வீரர்கள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். 6 பேர் உயிருடன் சிறை பிடிக்கப்பட்டனர்.
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் இலங்கை ராணுவத்துடன் இணைந்து கருணா தலைமையிலான தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் குழுவினர் இயங்கி வருகின்றனர். இத்தகைய ராணுவ முகாம் மீது நேற்று அதிகாலை 12:15 மணியளவில் திடீர் தாக்குதலில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டனர்.
இத்தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
முகாம் முற்றிலும் அழிக்கப்பட்டது. அங்கிருந்த பெருமளவிலான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications