பாஸில்-கருணாநிதியுடன் சந்திப்பு: பிரணாப் பேச்சு-நெடுமாறன் அதிருப்தி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிரணாப் முகர்ஜியை பாஸில் ராஜபக்சே சந்தித்ததும், பிரணாப் முகர்ஜி கருணாநிதியை சந்தித்து பேசிய பின்னர் தெரிவித்த விவரங்கள் தமிழர்களுக்குத் திருப்தி தருவதாக இல்லை. எனவே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதிக்க முதல்வர் கருணாநிதி ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

இலங்கை அதிபர் ராஜபக்சேவின் ஆலோசகரும் சகோதரருமான பாஸில் ராஜபக்சே டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் பேசியப் பிறகு, அதன் தொடர்ச்சியாக பிரணாப் முகர்ஜி சென்னையில் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்த விவரங்கள் தமிழர்களுக்குத் திருப்தி அளிக்கவில்லை.

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும், இந்திய அரசு இலங்கைக்கு ஆயுத உதவி செய்யக்கூடாது என்றும் தமிழக அனைத்து கட்சிகள் செய்துள்ள முடிவு குறித்து பிரணாப் முகர்ஜி எதுவும் கூறாதது தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பிரணாப் முகர்ஜியின் அறிவிப்புக் குறித்து விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு முதலமைச்சரை வேண்டிக் கொள்கிறேன் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+