ஜார்க்கண்ட்டில் மும்பை ரயில் எரிப்பு
Subscribe to Oneindia Tamil

லோக்மான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில், ஜார்க்கண்ட் மாநிலம் ஹாதியா ரயில் நிலையத்தில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தது. அப்போது இரவு 11 மணியளவில் சிலர் ரயிலுக்கு தீ வைத்தனர்.
இதையடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 3 பெட்டிகள் எரிந்து கருகி விட்டன.
இருப்பினும் சம்பவத்தின்போது ரயிலில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
அதே போல ரயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஹிண்டால்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான 5 டேங்கர் லாரிகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன.
பீகாரைச் சேர்ந்த இளைஞர் ராகுல் ராஜ், மும்பையில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் வகையில் மும்பை ரயிலுக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications