For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பஞ்சாபில் அரசு விமானம் விழுந்து 2 பேர் பலி

By Staff
Google Oneindia Tamil News

சண்டிகர்: பஞ்சாப் அரசுக்குச் சொந்தமான 6 இருக்கைகள் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர்.

பஞ்சாப் அரசுக்குச் சொந்தமான சி-90 விமானம் இன்று காலை 10.50 மணிக்கு சண்டிகரிலிருந்து கிளம்பியது. லூதியானாவில் உள்ள சானேவால் விமான நிலையம் நோக்கி அது சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஜூகியானா கிராமத்தில் விழுந்து நொறுங்கியது.

இதில் விமானி மஞ்சித் சிங் கோக்கர் மற்றும் துணை விமானி தலிப் சிங் கத்தாரியா ஆகியோர் பலியானார்கள். விமானத்தில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர்.

விமானம் விழுந்ததற்கான காரணம் தெரியவில்லை. மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X