வைகையில் வெள்ள அபாய எச்சரிக்கை!

Subscribe to Oneindia Tamil

மதுரை: கடும் மழை காரணமாக வைகை அணை நிரம்பி வருகிறது. இதனால் வைகை ஆற்றுப் பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. தேனி உட்பட 5 மாவட்டங்களில் பெய்த கனத்த மழை காரணமாக வைகை அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.

இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். இதில் வைகை அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டியுள்ளது.

அணையின் நீர் மட்டம் 68.5 அடியாக உயரும் போது 2வது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியாக உயரும் போது 3வது மற்றும் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும்.

மேலும் முல்லைப் பெரியாறு அணையில் இருந்தும் கடந்த ஒரு வார காலத்தில் பெரும் அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இந்த நீரும் வைகை அணையை அடைகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் மொத்த உயரம் 136 அடி. இதில் இப்போது 128.2 அடி நீர்மட்டம் உள்ளது.

தற்போது வினாடிக்கு 2031 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வினாடிக்கு 1544 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+