தேசிய கீதம்-''52 வினாடிக்குள் பாட வேண்டும்''
சென்னை: தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளுக்கும் மாநிலக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதில்,
நமது நாட்டு தேசியக்கொடியில் உள்ள இளஞ்சிவப்பு நிறம் மேலே இருக்கும் வகையில் கொடியை ஏற்ற வேண்டும். தேசியக் கொடி உள்ள கொடிக் கம்பம் இருக்கும் இடத்தின் அருகே உள்ள எந்தக் கொடியும் தேசியக் கொடி உள்ள கம்பத்தைவிட உயரமாக இருக்கக் கூடாது.
காலை 6 மணிக்கு மேல் கொடியை ஏற்றி மாலை 6 மணிக்கு இறக்கி விடவேண்டும்.
தேசிய கீதம் இசைக்கும்போது அனைவரும் எழுந்து நேராக நிமிர்ந்து நின்று பாடவேண்டும். சரியான உச்சரிப்பில் பாடவேண்டும்.
தேசிய கீதத்தை 52 வினாடிகளுக்குள் பாடி முடிக்கவேண்டும்.
தேசிய கீதத்தின் பொருள் உணர்ந்து பாடவேண்டும். எனவே தலைமை ஆசிரியர்கள் காலை நேரம் நடக்கும் கூட்டத்தில் தேசிய கீதத்தின் பொருளை ஆசிரியர்கள் மூலம் உணர்த்த வேண்டும்.
ஒவ்வொரு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும். விழா முடிவில் தேசிய கீதம் பாட வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications