முருகன் கோவில்களில் கந்த சஷ்டி விழா இன்று தொடக்கம்- 3ம் தேதி சூரசம்ஹாரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம் உள்பட உலகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் மகா கந்த சஷ்டி விழா இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
சூரபத்மன் உள்ளிட்ட அசுரர்களை 10 நாட்கள் நடந்த போரில் வென்ற முருகப் பெருமானை போற்றும் வகையில் கந்த சஷ்டி விழா நடத்தப்படுகிறது.
சூரபத்மனை வதம் செய்யப்பட்ட திருச்செந்தூரில் முருகனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது ஐதீகம்.
திருச்செந்தூர், திருத்தணி, திருப்பரங்குன்றம் உள்பட முருகப் பெருமானின் அறுபடை வீடுகளிலும், முருகப் பெருமான் கோவில் கொண்டுள்ள அனைத்துத் தலங்களிலும் கந்த சஷ்டி விழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இன்று தொடங்கும் இந்த விழாவில் நவம்பர் 3ம் தேதி சூர சம்ஹாரம் நடைபெறும்.
இதையொட்டி முருக பக்தர்கள் 6 நாள் கந்த சஷ்டி விரதம் கடைப்பிடிப்பர்.












Click it and Unblock the Notifications