தீபாவளி-டாஸ்மாக் 'சரக்கு' விற்பனை படுஜோர்
நெல்லை: தீபாவளியையொட்டி தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மது விற்பனை ரூ. 200 கோடியைத் தாண்டிவிட்டதாம்.
தமிழகம் முழுவதும் 6,700 டாஸ்மாக் கடைகள் உள்ன. இங்கு சராசரியாக தினமும் ரூ.45 கோடி முதல் ரூ.60 கோடி வரை சரக்கு' விற்பனை நடக்கும்.
இந் நிலையில் தீபாவளிக்கு முதல் நாளான 26ம் தேதி மாநிலம் முழுவதும் ரூ.100 கோடிக்கும், தீபாவளி தினத்தன்று ரூ.100 கோடிக்கும் மதுபான விற்பனை நடந்துள்ளது.
இதில் சென்னைக்கே முதலிடம். சென்னை நகரில் மட்டும் ரூ.14 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது. அடுத்த இடம் சேலத்துக்கு. இங்கு ரூ.8 கோடிக்கு 'சரக்கு' விற்றிருக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் 2 நாட்களில் ரூ.5 கோடி 'குடி' விற்பனை நடந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 200க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் உள்ளன. மாநகராட்சி பகுதியில் 46 கடைகள் உள்பட மாவட்டத்தில் 221 கடைகள் உள்ளன.
தீபாவளியையொட்டி 26ம் தேதி ரூ. 2 கோடியே 46 லட்சத்திற்கும், தீபாவளியன்று 27ம் தேதி ரூ. 2 கோடியே 83 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
சாதாரண நாட்கள் ரூ. 95 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை விற்பனையாகும். தீபாவளியை விற்பனையை பொறுத்தவரை 2 மடங்கிற்கு அதிகமான அளவில் மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.
நெல்லை மட்டுமின்றி மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தீபாவளியையொட்டி டாஸ்மாக்கி்ல் 5 மடங்கு அதிகமாக விற்பனை நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications