பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம்-160 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
குவெட்டா: பாகிஸ்தானின் தென் மேற்குப் பகுதியில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 160 பேர் வரை பலியாகிவிட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6.4 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
மிகவும் பின் தங்கிய இந்த மாகாணத்தில் பெரும்பாலான வீடுகள் மண் வீடுகளே. இதனால் இந்த நிலநடுக்கத்தால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்துவிட்டன. இதில் 160 பேர் பலியாகிவிட்டதாகத் தெரியவந்துள்ளது. ஆனால், பலியானோர் எண்ணிக்கை மேலும் மிக அதிகமாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவெட்டா நகருக்கு வடகிழக்கே உள்ள பகுதிகளை இந்த நிலநடுக்கம் தாக்கியது.












Click it and Unblock the Notifications