நிலநடுக்கம்: பாகிஸ்தானுக்கு உதவ தயார்-இந்தியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பாகிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதி்க்கப்பட்ட பலுசிஸ்தான் பகுதிக்கு நிவாரண உதவிகள் வழங்க இந்தியா முன் வந்துள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ராஸா கிலாணிக்கு பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், நிலநடுக்கத்தால் பலியானவர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், இந்த இக்கட்டான நேரத்தில் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும், தேவாயான நிவாரணப் பொருட்களைத் தரத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன் தினம் அங்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 180 பேர் வரை பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications