ரூ13 லட்சம் பணத்துடன் வந்த வியாபாரிகள்-விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: ரூ. 13 லட்சம் பணத்துடன், பஸ்சிலிருந்து இறங்கிய இரண்டு எண்ணை வியாபாரிகளை போலீஸார் கைது செய்தனர். பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை காஞ்சிபுரம் பஸ் நிலையத்திற்கு வந்த ஒரு பஸ்சிலிருந்து இருவர் இறங்கினர். இருவரும் ஆளுக்கு ஒரு பெரிய பையுடன் வந்தனர்.
அவர்களைப் பார்த்து போலீஸாருக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து இருவரையும் தடுத்து நிறுத்தி பையைத் திறந்து பார்த்தனர். அப்போது அந்தப் பைகளில் பணக் கட்டுக்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து இருவரையும் போலீஸார் காவல் நிலையம் கொண்டு சென்றனர். அவர்கள் வைத்திருந்த பைகளில் ரூ. 13 லட்சம் பணம் இருந்தது.
இந்தப் பணம் எப்படி வந்தது, ஏன் இப்படி கொண்டு வந்தார்கள் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications