For Daily Alerts
Just In
ஆவண மோசடி-ஷார்ஜாவில் 70 இந்தியர்கள் கைது
துபாய்: விசா, பாஸ்போர்ட், மருத்துவ சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றில் மோசடி செய்ததாக ஷார்ஜாவில் 70 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷார்ஜா முழுவதும் நடந்த பல்வேறு சோதனைகளில் இவர்கள் சிக்கினர். ஒரு குடியிருப்பில் மோசடி ஆவணங்கள் தயாரிக்கப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்த போலீஸார் அந்த வீட்டிலிருந்து ஏராளமான போலி ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
அதேபோல போலி ஆவணங்களுடன் தங்கியிருந்தவர்களும் பிடிபட்டனர். இவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
Comments
Story first published: Friday, October 31, 2008, 16:55 [IST]