க்ரீமி லேயர் வரம்பு ரூ. 4.5 லட்சமாக உயர்வு-இன்று முதல் அமல்

மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இட ஒதுக்கீட்டைப் பெற ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்ற வருமான வரப்பு உச்சவரம்பு கட்டுப்பாடு (க்ரீமி லேயர்) இருந்தது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த உச்சவரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்த பரிந்துரைத்தது.
அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு இப்போது அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் (3ம் தேதி) அமலுக்கு வருகிறது.
இதன்மூலம் பிற்பட்ட வகுப்பினரில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை உள்ளவர்களும் இனி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும், ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற முடியும்.
இந்த கிரீமிலேயர் 1993ம் ஆண்டு ரூ.1 லட்சமாக இருந்தது. 2004ம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.4.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிமீ லேயர் கட்டுப்பாடே இல்லாமல் எல்லா பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என தமிழக கட்சிகள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.
-
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
Heavy Rain: இன்னைக்கு நைட் புல்லா மழை வெளுக்க போகுது.. கோவை டூ குமரி வரை 22 மாவட்டங்களுக்கு அலர்ட் -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
தமிழ்நாட்டில் வெப்பநிலை அடியோடு குறையப்போகுது.. வானிலை மையம் குட்நியூஸ் -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
சென்னையின் மெகா ப்ராஜெக்ட் இதுதான்! மதுரவாயல் டூ துறைமுகம்.. பறக்கும் சாலையில் காத்திருந்த சர்ப்ரைஸ் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
அடேங்கப்பா.. தமிழகத்தில் 3 நாட்களில் ரூ.42.65 கோடி பறிமுதல்! கறார் அதிகாரிகள்.. கண்காணிப்பு தீவிரம்! -
சிபிஐ தொடங்கி ED வரை.. எல்லாருக்கும் பறந்த லெட்டர்.. தமிழக தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி -
இவ்வளவு ஸ்ட்ரிக்டா? 2 நாளில் 23 கோடி சிக்கியது! பணம், பொருளாக அள்ளிய தேர்தல் அதிகாரிகள்! முழு விவரம்












Click it and Unblock the Notifications