க்ரீமி லேயர் வரம்பு ரூ. 4.5 லட்சமாக உயர்வு-இன்று முதல் அமல்

மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இந்த இட ஒதுக்கீட்டைப் பெற ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்ற வருமான வரப்பு உச்சவரம்பு கட்டுப்பாடு (க்ரீமி லேயர்) இருந்தது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இந்த உச்சவரம்பை ரூ.4.5 லட்சமாக உயர்த்த பரிந்துரைத்தது.
அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டு இப்போது அரசாணையை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் (3ம் தேதி) அமலுக்கு வருகிறது.
இதன்மூலம் பிற்பட்ட வகுப்பினரில் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4.5 லட்சம் வரை உள்ளவர்களும் இனி மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலும், ஐஐடி, ஐஐஎம், ஐஐஎஸ்சி போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களிலும் 27 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற முடியும்.
இந்த கிரீமிலேயர் 1993ம் ஆண்டு ரூ.1 லட்சமாக இருந்தது. 2004ம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. தற்போது ரூ.4.5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த கிரிமீ லேயர் கட்டுப்பாடே இல்லாமல் எல்லா பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என தமிழக கட்சிகள் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications