ஷிம்லா-மலையில் பஸ் உருண்டு 44 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஷிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் மலைப் பாதையில் பஸ் உருண்டு பள்ளத்தாக்கில் விழுந்ததில் 44 பேர் பலியாயினர். 6 பேர் காயமடைந்தனர்.
ஷிம்லா மாவட்டத்தி்ல் உள்ள லம்பி தர் என்ற இடத்தில் இன்று காலை இந்தச் சம்பவம் நடந்தது. கோதிகாட் என்ற இடத்தில் இருந்து 50 பயணிகளுடன் சிம்லா நோக்கி சென்ற அந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து 300 அடி பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்து உருண்டது.
இதில் 43 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். மேலும் ஒருவர் மருத்துவமனையில் இறந்தார்.
ராணுவம், இந்திய-திபெத்திய எல்லை போலீசார் ஆகியோர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications