இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு உதவி-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை ராணுவத்திற்கு மத்திய அரசு அயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை அனுப்பியது உண்மை தானே?, அப்போது திமுக மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கைத் தமிழர்களின் மோசமான நிலைமையை நான் முதலில் எழுப்பியதையடுத்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினார் கருணாநிதி. ஆனால், நிறைவேற்றப்பட்ட சில தீர்மானங்கள் குறுகிய காலத்திலேயே மீறப்பட்டுவிட்டன.

தனது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், ராமேஸ்வரத்தில் முக்கிய திரைப்பட பிரமுகர்களின் கூட்டத்திற்கும், சென்னையில் மனித சங்கிலி போராட்டத் ற்கும் ஏற்பாடு செய்தார் கருணாநிதி. பின்னர், நீண்ட காலமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவுவதற்காக நிதி திரட்டப்படும் என்று அறிவித்தார்.

இது போன்ற அவசரமான நடவடிக்கைகளுக்கு இடையில், என்னால் எழுப்பப்பட்ட சில அடிப்படை கேள்விகளுக்கு இன்னும் பதிலளிக்கப்படாமல் உள்ளன.

மத்திய அரசு அயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் அதி நவீன சாதனங்களை இலங்கை ராணுவத்திற்கு அனுப்பியது உண்மை தானே?

தமிழ் மக்களுக்கு எதிராக பயன்படுத்துவதற்கான சாதனங்களைப் பொருத்துவதற்காக இந்திய விஞ்ஞானிகளும், தொழில்நுட்ப வல்லுநர்களும் மத்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட போது, திமுக மத்திய அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

இலங்கையில் உள்ள தங்களது சகோதர, சகோதரிகள் பாதிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக மக்கள் உண்மையான கவலை கொண்டுள்ள நிலையில், வசூலித்த பணத்தை வைத்துக் கொண்டு கருணாநிதி என்ன செய்யப் போகிறார்?

இலங்கை அரசிடம் அளிக்கப் போகிறாரா? என்று கேட்டுள்ளார் ஜெயலலிதா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+