'ஒபாமா எபெக்ட்'-பங்குச் சந்தைகளில் ஏறுமுகம்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஒபாமாவின் வெற்றியால் உலகம் முழுவதும் பங்குச் சந்தைகளில் புதிய உத்வேகம் காணப்பட்டது.

ஒபாமா வெல்லலாம் என்று தெரியவந்ததையடுத்து அமெரிக்க சந்தையில் நேற்று பங்குகளின் விலையில் ஏற்றம் காணப்பட்டது.

இதையடுத்து இன்று ஆசிய சந்தைகளும் ஏறுமுகத்தில் உள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் துவங்கிய உடனேயே சென்செக்ஸ் 314 புள்ளிகள் உயர்ந்தது. இப்போது சென்செக்ஸ் 10,945 ஆக உள்ளது.

அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் 98 புள்ளிகள் கூடின. இப்போது நிப்டி குறியீட்டு எண் 3,240 என்ற நிலையில் உள்ளது.

உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஏறுமுகத்துக்கு ஒபாமாவின் வெற்றியால் ஏற்பட்டுள்ள புதிய நம்பிக்கையே காரணமாகக் கருதப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை அந்தக் காரணத்தோடு, கடன்கள் மீதான வட்டியைக் குறைக்குமாறு வங்கிகளுக்கு நிதியமைச்சர் ப.சிதம்பரம் உத்தரவிட்டதும் முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+