'இலங்கை': பிரதமர்-சோனியாவுடன் பாலு மீண்டும் சந்திப்பு
டெல்லி: இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் மத்திய அரசு தீவிரமாக வற்புறுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியாவிடம் டி.ஆர்.பாலு மீண்டும் நேரில் கோரிக்கை விடுத்தார்.
பீம்ஸ்டெக் எனப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டு தலைவர்களின் மாநாடு, வரும் 13ம்ந் தேதி டெல்லியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வருகிறார்.
இந் நிலையில், பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி ஆகியோரை, மத்திய கப்பல் போக்குவரத்து, சாலை மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி டி.ஆர்.பாலு தனித்தனியே சந்தித்துப் பேசினார்.
டெல்லி வரும் ராஜபக்சேயிடம், இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோர் வற்புறுத்த வேண்டும் என்று பாலு கேட்டுக் கொண்டார்.
இது குறித்த முதல்வர் கருணாநிதியின் எண்ணங்களையும் அவர் தெரிவித்தார்.
மேலும் இலங்கை தமிழர்களின் நலனுக்காக அனுப்பி வைக்கப்படும் மருந்துகள் மற்றும் நிதி உதவிகளை, இலங்கை அரசு மூலம் வினியோகிக்காமல், இலங்கையில் உள்ள இந்திய தூதர் மேற்பார்வையில் வழங்க வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications