'ஒபாமா': பீதியில் ஐடி, கால்சென்டர், பிபிஓ நிறுவனங்கள்

அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தும் நிறுவனங்களுக்கு வரி சலுகையும், அவுட்சோர்சிங் செய்து வேலைவாய்ப்புகளை வெளிநாடுகளுக்குத் தள்ளும் அமெரிக்க நிறுவனங்களுக்கு கூடுதல் வரியும் விதிக்கப்படும் என ஒபாமா தனது தேர்தல் பிரச்சாரத்தில் உறுதியளித்துள்ளார்.
இந் நிலையில் அவர் வெற்றியும் பெற்றுவிட்டதால் இந்திய பிபிஓ மற்றும் கால்சென்டர் நிறுவனங்களிடையே பீதி பரவியுள்ளது.
இது குறித்து சிதம்பரம் கூறுகையி்ல்,
வரும் காலத்தில் இந்திய-அமெரிக்க உறவு, குறிப்பாக வர்த்தக உறவு மேலும் வலுப்படும் என்பதே என் நம்பிக்கை. அவுட்சோர்சிங் குறித்த அவரது கமெண்ட் குறித்து அதிகமாக கவலைப்படத் தேவையி்ல்லை.
அவர் பதவியில் அமர்ந்த பின்னரே அவருக்கு இந்த விவகாரம் எல்லாம் புரியும். பொருளாதாரரீதியில் ஒன்றுடன் ஒன்று வலைபோல பிணைந்துவிட்ட தேசங்கள் கொண்ட இந்த உலகில் எந்த நாடு தனித்து எதையும் செய்துவிட முடியாது.
இதை அவர் பதவிக்கு வந்தவுடன் புரிந்து கொள்வார். இதனால் நாம் இதை நினைத்து அஞ்ச வேண்டியதில்லை என்றார்.
ஐடி பங்குகளில் வீழ்ச்சி:
ஆனாலும் ஒபாமா வென்றார் என்ற தகவல் வந்தவுடனேயே இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களின் பங்குகளில் வீழ்ச்சி ஏற்பட்டுவிட்டது. பொதுவாக பங்குச் சந்தையில் ஏறுமுகம் இருந்த நிலையில் சாப்ட்வேர் நிறுவன பங்குகள் ஆட்டம் கண்டன.
குறிப்பாக இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, சத்யம் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன.
அவுட்சோர்சிங்கில் ஒபாமா கை வைத்தால் இந்த நிறுவனங்கள் உள்ள்ட்ட ஐடி நிறுவனங்களுக்கு வரும் ஆர்டர்கள் குறையலாம் என்ற அச்சம் காரணமாக பங்குகள் விலை குறைந்தன.
இதே போன்ற அச்சம் சீன நிறுவனங்களிடமும் பரவியுள்ளது. சீனா தனது கரன்சியில் மதிப்பை அதிகரிக்காமல் இருந்து வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் டாலரில் நடக்கும் வர்த்தகத்தில் அந்த நாடு பெரும் லாபம் அடைந்து வருகிறது. இதை ஒபாமா தடு்க்கலாம் எனத் தெரிகிறது. கரன்சியின் மதிப்பை அதிகரிக்குமாறு சீனாவை ஒபாமா நெருக்கலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications