அக்கரையான்குளத்தைப் பிடித்து விட்டோம் - இலங்கை ராணுவம்

கிளிநொச்சியைப் பிடிக்க ராணுவம் தீவிரமாக முயன்று வருகிறது. இதில் கிளிநொச்சியைச் சுற்றிலும் உள்ள முக்கிய பகுதிகள் பல, படிப்படியாக தங்கள் வசம் வந்து கொண்டிருப்பதாக ராணுவம் கூறி வருகிது.
இந்த நிலையில், மிக மிக முக்கியமான பகுதியாக கருதப்படும் அக்கரையான்குளத்தை முழுமையாக மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது. 3 நாள் சண்டைக்குப் பின்னர் அக்கரையான்குளம் வீழ்ந்துள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.
இலங்கை லைட் இன்பேன்டரி, இலங்கை சிங்கள ரெஜிமென்ட் மற்றும் கஜபா ரெஜிமென்ட் ஆகிய படைப் பிரிவுகள், இந்த சண்டையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், பாதுகாப்புத்துறை செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து ராணுவம் கூறுகையில், அக்கரையான்குளம் முழுமையும் எங்கள் வசம் வந்துள்ளது. அங்குள்ள மருத்துவமனை, பள்ளிக்கூடம், பிரசவ இல்லம், தபால் அலுவலகம், ஆசிரியர் குடியிருப்பு, கடை வீதி கட்டடங்கள் என மொத்த அக்கரையான்குளமும் ராணுவம் வசம் வந்துள்ளது.
அங்கு எங்களுடன் போரிட்ட விடுதலைப் புலிகள் படையில் இருந்தவர்கள் அனுபவம் இல்லாதவர்கள், சிறார்கள் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications