நெல்லையில் புதிய விமானப் படை தளம்!
நெல்லை: கயத்தாறு அல்லது நெல்லையில் புதிய விமானப் படை தளம் அமைக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
நெல்லையை அடுத்த காயத்தாறில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட விமான ஓடுதளம் உள்ளது. இந்த ஓடுதளத்தை நவீனபடுத்தி விமானப் படை தளம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நெல்லை பகுதியில் விமானபடை தளம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்ய விமானபடை உயர் அதிகாரி பிரசாத் தனி ஹெலிகாப்டரில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் வந்து இறங்கியதாக தகவல் வெளியானது.
இதேபோல் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இதே போன்று ஆய்வு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
நெல்லை வந்த ராணுவ அதிகாரியை பாளை தாசில்தார் கண.முருகானந்தம், தலைமையிடத்து துணை தாசில்தார் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் விமானபடை அதிகாரி பிரசாத், கயத்தாறு, நெல்லை அருகே காலியாக உள்ள 500 ஏக்கர் நிலம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்த இரண்டு இடங்களில் ஏதாவது ஒரு இடத்தில் விமானபடை தளம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications