கூகுளுடன் பேச்சு முறிவு; மீண்டும் மைக்ரோசாப்டுடன் யாஹூ பேச்சு!
சான்பிரான்சிஸ்கோ: யாஹூவை வாங்க மைக்ரோ சாப்டுக்கு இதுவே சரியான தருணம் என யாஹூ நிறுவன தலைவர் ஜெர்ரி யாங் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தம் தொடர்பாக யாஹூ நடத்தி வந்த பேச்சில் தோல்வி ஏற்பட்டதைத் தொடர்ந்து இரு நிறுவனங்களும் பேச்சை முறித்துக் கொள்வதாக அறிவித்தன.
இந்நிலையில், இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடந்த வெப் 2 கூட்டத்தில் பங்கேற்ற யாஹூ தலைவர் ஜெர்ரி யாங், மீண்டும் யாஹூவை மைக்ரோசாப்டுக்கு விற்பது குறித்த பேச்சுக்களைத் தொடங்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "கூட்டு வர்த்தகம் குறித்துப் பேச இப்போது அனைத்து நிறுவனங்களுக்குமே யாஹூ தன் கதவுகளைத் திறந்து வைத்துள்ளது. மைக்ரோசாப்ட்டுடன் மீண்டும் பேச்சுக்களைத் துவங்க விரும்புகிறோம். அவர்களுக்கும் யாஹூவை வாங்க இதுவே சரியான தருணம்", என்றார்.
கடந்த 2006-ம் ஆண்டு யாஹூவின் ஒரு பங்குக்கு 33 டாலர் வரை தர முன்வந்தது மைக்ரோசாப்ட். ஆனால் 37 டாலருக்கு குறைத்து விற்க மாட்டோம் என உறுதியாக யாஹூ நின்றதால் பேச்சு தோல்வியில் முடிந்தது.












Click it and Unblock the Notifications