ஆலங்குடி-ஆற்றில் பாய்ந்த பஸ், 32 பேர் காயம்
Subscribe to Oneindia Tamil
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், தனியார் பேருந்து ஆற்றில் பாய்ந்தது. இதில் பஸ்சில் இருந்த 32 பயணிகள் படுகாயமடைந்தனர்.
புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு அந்தப் பஸ் போய்க் கொண்டிருந்தது. அப்போது ஆலங்குடியில் பஸ் வந்தபோது எதிர் திசையில், ஒரு லாரி வேகமாக வந்தது.
அதற்கு வழி விடுவதற்காக பஸ் டிரைவர் பஸ்ஸை ஓரம் கட்டியபோது, எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த ஆற்றில் பஸ் பாய்ந்து விட்டது.
நல்ல வேளையாக ஆற்றில் தண்ணீர் இருந்ததால் பயணிகள் 32 பேரும் காயத்துடன் உயிர் தப்பினர். தண்ணீர் இல்லாமல் இருந்திருந்தால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.
காயமடைந்த பயணிகள் ஆலங்குடி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications