தூத்துக்குடியில் 4 இலங்கைத் தமிழர்கள் கைது - ஒருவர் புலி?
தூத்துக்குடி: தூத்துக்குடியில், இலங்கையைச் சேர்ந்த நான்கு பேர் உள்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவர் விடுதலைப் புலியாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அந்த நாட்டு ராணுவத்திற்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் தூத்துக்குடி கடலோர காவல்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது தருவைகுளம் கல்மேடு அருகே உள்ள கடல் பகுதியில் படகில் பெருட்களை எற்றிக் கொண்டிருந்தனர்.
அவர்களை போலீசார் சுற்றி வளைத்து சோதனை செய்த போது அவர்களிடமிருந்து 50 மினி லாரி டியூப்கள், 4கார் பேட்டரிகள், 4 கேன் டீசல், 35 லிட்டர் அமிலம் போன்றவைகளை கைப்பற்றினர்.
போலீசார் விசாரணையில் அவைகள் இலங்கைக்கு கடத்தி கொண்டு செல்ல இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இவற்றின் மதிப்பு ரூ 10 லட்சம் என கூறப்படுகிறது.
கடத்தலில் ஈடுபட்ட யாழ்பாணத்தைச் சேர்ந்த பாலா(46), அந்தோணி ஜெனிபர் (40), மேக வண்ணன்(42), கனகரத்தினம்(35), மதுரை தோப்பூரை சேர்ந்த தங்க பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதில் பாலா விடுதலைப்புலி இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications