'சீட் விற்பனை'-மார்கரெட் ஆல்வா ராஜினாமா

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான ஆல்வா அக் கட்சியின் மூத்த தலைவராவார்.
சில மாதங்களுக்கு முன் கர்நாடகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நடந்தபோது தனது இரு மகன்களுக்கு சீட் கேட்டார். ஆனால், தலைவர்களி்ன் உறவினர்களுக்கு சீட் தருவதில்லை என்று ரூல் பேசிய மாநில காங்கிரஸ் தலைவர்கள் அவர்களுக்கு சீட் தரவில்லை.
இந் நிலையில் சமீபத்தில் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த ஆல்வா, கர்நாடக தேர்தலில் பணத்தை வாங்கிக் கொண்டு சீட்டுகளை தலைவர்கள் விற்றார்கள், மக்கள் ஆதரவு உள்ளவர்கள் ஒதுக்கப்பட்டு பணம் உள்ளவர்களுக்கே சீட்கள் தரப்பட்ட, இதனால் தான் அங்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது என்று பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.
மேலும் எனது குடும்பத்தில் யாருக்கும் சீட் கிடையாது என்று சொன்ன கட்சியே இப்போது 5 மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பல தலைவர்களின் மகன், மகள், உறவினர்களுக்கு சீட் தந்துள்ளது என குற்றம் சாட்டினார்.
என் மகனுக்கும் மூத்த தலைவர் ஜாபர் ஷெரீப்பின் மகனுக்கும் சீட் தராதது ஏன்?. அவர்கள் என்ன தேச விரோதிகளா என்று கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து ஆல்வா மீது நடவடிக்கை எடுக்குமாறு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவுக்கு சோனியா காந்தி உத்தரவிட்டார். பாதுகாப்பு அமைச்சர் ஆண்டனி தலைமையிலான அந்தக் குழுவின் முன் ஆஜரான ஆல்வா, தனது நிலையை விளக்கிவிட்டு நேராக சோனியா காந்தியை சந்தித்தார்.
அப்போதே தனது ராஜினாமா கடிதத்தை சோனியாவிடம் அவர் தந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆனால், ராஜினாமாவை சோனியா ஏற்றாரா இல்லையா என்று தெரியவில்லை.
சமீபத்தில் கர்நாடக காங்கிரஸ் தலைவராக தேஷ்பாண்டே நியமிக்கப்பட்டார். இதை ஆல்வா விரும்பவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்தே அவர் கட்சித் தலைமையுடன் மோதலை ஆரம்பித்தார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications