போலி விசா: 3 சரவண பவன் ஊழியர்களுக்கு வலைவீச்சு
சென்னை: போலி விசா மூலம் அமெரிக்கா செல்ல தயாராக இருந்த சரவண பவன் ஊழியர்கள் 3 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களைப் பிடிக்க தனிப்படை போலீஸார் சிவகங்கை, தேனி, பெரம்பலூர் விரைந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு போலி ஆவணங்கள் மூலம் ஆட்களைக் கடத்தியதாக சரவண பவன் ராஜகோபாலின் மகன் சிவக்குமார் மற்றும் ஊழியர் ராமு ஆகியோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிவக்குமார் நான்கு பேரை இவ்வாறு போலி விசாக்கள் மூலம் அமெரிக்காவுக்கு அனுப்பியிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சிவக்குமார் மூலம் போலி விசாக்கள் பெற்று அமெரிக்கா செல்ல தயாராக இருந்த சரவண பவன் ஊழியர்கள் சேகர், சுப்ரமணி, ஆசைத்தம்பி ஆகியோர் தலைமறைவாகி விட்டனர்.
அவர்கள் தேனி, சிவகங்கை, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அங்கு விரைந்துள்ளன.
இதற்கிடையே, சிவக்குமாரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸார் தீர்மானித்துள்ளனர். மேலும் அமெரிக்கா மற்றும் வெளிநாடுகளில் உள்ள சரவண பவன் கிளைகளில் பணியாற்றும் ஊழியர்கள் குறித்த விவரத்தையும் போலீஸார் சேகரிக்கவுள்ளனர்.












Click it and Unblock the Notifications