போலீஸைக் கண்டித்து கருப்புக் கொடி போராட்டம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகேயுள்ள கிராமத்தில் காவல்துறையை கண்டித்து பொதுமக்கள் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள கிராமம் நைனார்பத்து. இங்கு வசித்து வருபவர் கோபால் நடராஜன். இவர் பிஎஸ்என்எல் ஊழியர். இவருக்கு புவனேஸ்வரி, ஐஸ்வர்யா என்ற இரு மகள்கள் உள்ளனர். 2 பேருமே பட்டதாரிகள். இவர்கள் இருவரும் கடந்த 4ம் தேதி திடீரென காணாமல் போய் விட்டனர்.
இதுகுறித்து கோபால் நடராஜன் மெஞ்ஞானபுரம் போலீசில் புகார் செய்தார். புகாரை தொடர்ந்து அப்பெண்களின் டயரியை போலீசார் சோதனை போட்டதில் அதில் இஸ்லாம் குறித்து அதிக கருத்துகள் எழுதப்பட்டு இருந்ததாகவும், அவர்களுடைய இஸ்லாமிய தோழிகள் இருவரையும் மதம் மாற்றம் செய்து வருவதாகவும், தகவல்கள் தெரிய வந்துள்ளதை தொடர்ந்து போலீசார் தீவிர புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அக்காள், தங்கையின் சில இஸ்லாமிய தோழிகளான சிலரையும் தற்போது காணவில்லையாம். இந்நிலையில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு வரும் 14ம் தேதிக்குள் காணாமல் போன 2 பெண்களையும், கடத்தியவர்களையும் கண்டுபிடிக்கவில்லை என்றால் கிராமம் முழுவதும் கருப்பு கொடி ஏற்றி காவல் துறைக்கு கண்டனம் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி ஊராட்சி மன்ற தலைவர் அழகேசன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications