மது ஆலைக்கு எதிராக போர்க்களத்தில் குதிக்கும் கிராமம்
புதுக்கோட்டை: மது ஆலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கிராமமே போராட்டத்தில் குதித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் காந்தர்வக்கோட்டை தாலுகாவில் உள்ள கிராமம் கல்லக்கோட்டை. அழகிய கிராமமான இங்கு வெளிநாட்டு மது வகைகளை தயாரிக்கும் ஆலை ஒன்று அமையவுள்ளது.
இந்த மது ஆலைக்கு ஒட்டுமொத்த கிராமும், அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இந்த மது ஆலை வந்தால் நிலத்தடி நீர் கடுமையாக கெட்டுப் போகும், சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படும் என கிராம மக்கள் எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக பெரும் போராட்டத்திலும் அவர்கள் இறங்கியுள்ளனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் கிராம மக்களின் பிரதிநிதிகளை புதுக்கோட்டைக்கு அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தியது.
அப்போது, இந்த மது ஆலைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என்று கிராம மக்களும், அரசியல் தலைவர்களும் ஒரே குரலில் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மக்களின் கோரிக்கையை கேட்டுக் கொண்ட டிஆர்ஓ மகேந்திரவேல், கிராம மக்களின் கோரிக்கையை ஆட்சித் தலைவரிடம் தெரிவி்ப்பதாக உறுதியளித்தார்.












Click it and Unblock the Notifications